Tuesday 12 June 2012

சொல்லெனப்படுவது யாதெனில்....

அடங்காப்பிடாரி

மேனாமினுக்கி

மூதேவி

ஓடுகாலி

மலடி

முண்டச்சி

வேசி என

பெரும்பாலும்

பெண்பாலாகவே

வலிக்க ஒலிக்கும்

இந்த வல்லின

வசைச்சொற்களுக்கு

மத்தியில் அவ்வப்போது

கவிஞனாலும்

காதலனாலும்

உச்சியோடு சேர்ந்து காதும்

குளிரும்படி

உச்சரிக்கப்படுகிறது..

தேவதை என்ற மெல்லினச்சொல்!


Published with Blogger-droid v2.0.4

1 comment: