♥ ♥
இப்போது பெய்யும்
மழைக்கு காரணம்
முன் எப்போதோ பெய்த
மழையில் முளைத்து வளர்ந்த
மரம்!!
♥ ♥ ♥
Saturday 29 September 2012
மழைக்காரணம்::
பிழை மழை::
♥ ♥
மழை சில நேரங்களில்
பிழையாகி விடுகிறது
பொத்தல் விழுந்த
கூரைமேல் பொழிகையில்!!
♥ ♥ ♥
Thursday 27 September 2012
குழந்தை மனம்::
♥ ♥
எப்போதும்
புரியாத பாஷையில்
உளறிக்
கொண்டிருந்தாலும்
புத்த அமைதியில்
இயங்கிக் கொண்டிருக்கிறது
குழந்தையின் மனம்!!
♥ ♥ ♥
Wednesday 26 September 2012
மகள்::
♥ ♥
யாரோ ஒருவருக்கு
மனைவியாகவும்
யாரோ ஒருவருக்கு
தாயாகவும்
உருமாறிக் கொண்டிருக்கிறாள்
படைப்பாற்றல் மிகுந்த
என் குட்டி மகள்
பிருந்தா!!
♥ ♥ ♥
வாசம்::
♥ ♥
நீ என்னோடு
இருக்கையில்
ஆம்பலாகவும்
என்னை விட்டுப்
பிரிகையில் சாம்பலாகவும்
வாசம் வீசும்
என் இதயம்!!
♥ ♥ ♥
Monday 24 September 2012
கவிதை::
♥ ♥
நீ என்னுடன்
இருக்கும் போதெல்லாம்
நான் கவிதை பற்றி
சிந்திப்பதுமில்லை..
எழுதுவதுமில்லை..
அப்போது கவிதையோடு
வாழ்ந்து கொண்டிருப்பேன்!!
♥ ♥ ♥
Friday 21 September 2012
மோகம்::
♥ ♥
நேயர்விருப்பத்தில்
உன்பெயரும் என்பெயரும்
சேர்ந்து ஒலித்த
அக்கணத்தில்
தீர்ந்துபோனது
விருப்பப்பாடலின்
தீராமோகம்!!
♥ ♥ ♥
Thursday 20 September 2012
காதல்::
♥ ♥
நானும் நீயும்
கோவிலில்
சந்தித்துக்
கொள்ளும் போது
நடமாடும்
தெய்வமாய்
கோவிலுக்குள்
உலவிக்
கொண்டிருக்கும்
காதல்!!
♥ ♥ ♥
Tuesday 18 September 2012
கவிஞன்::
♥ ♥
நல்லவேளை..
காதலிக்க நீ
கிடைத்தாய்!
இல்லையென்றால்
நான் கவிஞனாகியிருக்க
முடியாது!!!
♥ ♥ ♥
Monday 17 September 2012
விதி::
♥ ♥
நில்
கவனி
காதலி!
இப்படித்தான்
ஆரம்பித்தது
உனக்கான எனது
கவிதை விதி!!
♥ ♥ ♥
Friday 14 September 2012
புன்னகை::
♥ ♥
உன் புன்னகையால்
நீ என்னை
மன்னிக்கும்
போதெல்லாம்
மீண்டும் மீண்டும்
தவறு செய்யத்
தோன்றுகிறது!!
♥ ♥ ♥
Thursday 13 September 2012
பாக்கியம்::
♥ ♥
கடற்கரை குதிரை
சவாரியில் உன்னை
ஏற்றிப்போகும்
குதிரைக்கு மட்டும்
வாய்த்துவிடுகிறது
பஞ்சுமூட்டையை
சுமந்து செல்லும்
பாக்கியம்!!
♥ ♥ ♥
Monday 10 September 2012
ஒருதலைக் காதல்::
♥ ♥
நான்காய் மடித்து
நாளொரு காதல்கடிதம்
நான் தந்தேன்..
இறுதியில்
இரண்டாய் மடித்த உனது
திருமண அழைப்பிதழோடு
நீ நிற்க,
வாழ்வா சாவா என்ற
தடுமாற்றத்தில்
இருதலைக் கொள்ளியாய்
இடையில் நிற்கிறது என்
ஒருதலைக் காதல்!!
♥ ♥ ♥
Sunday 9 September 2012
கரை::
♥ ♥
ஓடிவந்து நீ
கால் நனைத்தாய்...
ஆற்றங்கரை
தீர்த்தக்கரையானது!!
♥ ♥ ♥
Saturday 8 September 2012
Thursday 6 September 2012
தேவதை::
♥ ♥
எவரிடத்தில் காதல்
நிரம்பியிருக்கிறதோ
அவரிடத்தில்
தேவதை வசிக்கிறாள்!!
♥ ♥ ♥
Wednesday 5 September 2012
கவிதை::
♥ ♥
கற்பணையின்
உச்சம் தொட
நினைத்து
உன்னைப்பற்றி
கவிதையொன்று
புனைந்தேன்...
கடைசியில்
அது ஒரு
உச்சகட்ட
கவிதையாகிப்
போனது போ!
♥ ♥ ♥
முத்தம்::
♥ ♥
நீ என்னோடு நடத்தும்
சண்டைகளுக்காகவே
காத்துக்கிடக்கிறது
சமாதான
முத்தமொன்று!
♥ ♥ ♥
Saturday 1 September 2012
காதல்::
காதல்
♥ ♥
என்னைத் தவிர்த்து
ஏதாவது ஒரு
கவிதை எழுது என்கிறாய்...
அப்படியானால்
கவிதை தவிர
வேறு ஏதாவதுதான்
எழுத வேண்டும்!
♥ ♥ ♥