♥ ♥
நான்காய் மடித்து
நாளொரு காதல்கடிதம்
நான் தந்தேன்..
இறுதியில்
இரண்டாய் மடித்த உனது
திருமண அழைப்பிதழோடு
நீ நிற்க,
வாழ்வா சாவா என்ற
தடுமாற்றத்தில்
இருதலைக் கொள்ளியாய்
இடையில் நிற்கிறது என்
ஒருதலைக் காதல்!!
♥ ♥ ♥
Published with Blogger-droid v2.0.4
No comments:
Post a Comment