Monday 10 September 2012

ஒருதலைக் காதல்::

♥ ♥

நான்காய் மடித்து

நாளொரு காதல்கடிதம்

நான் தந்தேன்..

இறுதியில்

இரண்டாய் மடித்த உனது

திருமண அழைப்பிதழோடு

நீ நிற்க,

வாழ்வா சாவா என்ற

தடுமாற்றத்தில்

இருதலைக் கொள்ளியாய்

இடையில் நிற்கிறது என்

ஒருதலைக் காதல்!!

♥ ♥ ♥


Published with Blogger-droid v2.0.4

No comments:

Post a Comment