காதல் அந்தாதி....13
♥
என்னை
சீரழித்து
சீராக்கியது அது
சரியா தவறா என
பகுத்தறியும் அறிவை
மழுக்கி
போதையூட்டியது அது
உறக்கத்தை முழுதுமாய்
உறிஞ்சிக்கொண்டு
கவிஞனென்று
கிறுக்கனாக்கியது அது
ரோஜாக்களை தினம் தினம்
கொலை செய்யத்
தூண்டியதும் அதுவே
நான் சொல்வதெல்லாம்
காதல்..
காதலைத் தவிர
வேறொன்றுமில்லை!
♥
Published with Blogger-droid v2.0.4
No comments:
Post a Comment