Tuesday 2 October 2012

தேநீர்மழை::

தேநீர்மழை

♥ ♥

¤

தேநீரின் சுவை

கூடிக்கொண்டே

போகிறது

மழை அதிகமாக அதிகமாக!

¤

உடல் நனையாத

பெருமழை

நாளொன்றில்

மனம் நனைத்தது

குடல் நனைத்த

தேநீர்த்துளி!

¤

ஒருகோப்பைத் தேநீரை

மணிக்கணக்கில்

சுவைப்பதற்கு

மழையை விட

சிறந்த காரணம்

ஏதுமிருக்க முடியாது!

¤

தேநீரோடு மழையை ரசிக்க

நீயிருக்கிறாய்..

உன்னோடு மழையை

ரசிக்க நானிருக்கிறேன்..

மழையோடு மழையை

ரசிக்கத்தான்

யாருமில்லை!

¤

அந்த தேநீர் விடுதியின் மேஜையிலிருந்த

காலிக் கோப்பை

உணர்த்தியது

யாரோ ஒருவர்

முழு மழையையும்

பருகிவிட்டுப்

போயிருந்ததை!

¤

ஒரு கையில் தேநீர்

மறு கையில் சிகரெட்

கவனிக்காத நேரத்தில்

கடந்துவிட்டது மழை!

¤

♥ ♥ ♥


Published with Blogger-droid v2.0.4

No comments:

Post a Comment