Wednesday 19 June 2013

மகளாகிய தேவதை 11

மகளாகிய தேவதை  11




வெள்ளையடித்த

சுவர்களில்

கொள்ளையடிக்கும்

பென்சில் தீற்றல்கள்


அடுக்கி வைத்ததை

கலைத்து வைத்திருக்கும்

கலைநயம்மிக்க

மேஜைகள்


திறந்த புத்தகங்களுடன்

மூடியிருக்கும்

அலமாரிகள்


அங்குமிங்குமாய்

கழற்றிப் போட்டிருக்கும்

அழுக்கில்லா ஆடைகள்


தண்ணீர் சிந்திய

வழுக்கும் வாசற்படிகள்


கோலத்தின்மேல்

கோலம்போட

அரைகுறையாய்

பிய்த்துப்போட்டிருக்கும்

அரளிப்பூக்கள்


என

அழகியல் விதிப்படியேதான்

திகழ்கின்றது..


மகளும்

மகள்சார்ந்த வீடும்!


Published with Blogger-droid v2.0.4

No comments:

Post a Comment