Monday 17 June 2013

மகளாகிய தேவதை 7

மகளாகிய தேவதை  7




அநேகமாய்

பூமித்தாயின்

உச்சி குளிர்ந்திருக்கலாம்


பறந்து பறந்து

பட்டாம்பூச்சிகளின்

சிறகு வலித்திருக்கலாம்


திறந்திருக்கும்

முன்வாசல் கதவுகள்

நடைசாத்தப்பட்டு


எறிந்து கிடந்த

வீட்டுப் பொருட்கள்

எட்டா இடத்தில்

பத்திரமாகியிருக்கலாம்


என்ன செய்வது

ஒரு பூ மலர்வதை

இவ்வளவு இயல்பாய்

விளக்கிச் சொல்ல

முடியாதுதான்..


"மகள் நடக்கப் பழகிவிட்டாள்"


Published with Blogger-droid v2.0.4

No comments:

Post a Comment