Wednesday 26 June 2013

மகளாகிய தேவதை 19

மகளாகிய தேவதை  19




அழகானதோர்

ஓட்டுவீடு..

அதைச் சுற்றி

நீண்டிருக்கும்

புல்வெளி..

வீட்டின் முன்னால்

ஒரு சிறு நதி..

நதியில் இரு

வாத்துக் குஞ்சுகள்..

ஆங்காங்கே சில

தாமரைப்பூக்கள்..

கரையோரம் சில

தென்னை மரங்கள்..

வானில் பறக்கும்

ஒற்றைப் பறவை..


படம் வரைகிறேன்

என்று சொல்லி

இன்றைக்கும்

ஒரு கவிதையைத்தான்

எழுதித் தந்திருக்கிறாள்

மகள்!


Published with Blogger-droid v2.0.4

No comments:

Post a Comment