Tuesday 24 July 2012

கட்டுரை::1

நான் எழுத முயற்சித்த முதல்
கட்டுரை இது..
¤
தொலைந்து போன
கடிதங்கள்
¤
கடிதங்கள் என்பது
அனைவருக்கும்
அன்பானவர்களால்
பரிமாறப்படும்
மனதின் கூட்டாஞ்சோறு.
பேனா முனையில்
வழிந்தொழுகும்
எழுத்துக்களெல்லாம்
தொலைவிலிருப்போரின்
ஆன்மாவே.
சில சமயம் சிலவற்றைத் தாங்கிவரும் கடிதங்கள்
உண்மையிலுமே
ஒரு சுகதாங்கிதான்.
"தபால்காரன் தெய்வாமாவான்" என
'காதலித்துப்பார்' என்ற கவிதையில்
சொல்லியிருப்பார் வைரமுத்து.
உண்மையில் பலபேர்க்கு கடிதங்களே சிலசமயம் தெய்வமாகியிருக்கும்!
அது வேலைக்கான
அழைப்பாயிருக்கலாம், அல்லது
காதலுக்கான அங்கீகரமாகவும் இருக்கலாம்.
அயல்தேசத்திலிருக்கும்
மகனுக்கு தாயும்,
கிராமத்திலிருக்கும்
தாய்க்கு மகனும்
அனுப்பும் கடிதங்கள்
பெரும்பாலும்
அஞ்சல்கொடி உறவாய்த்தானிருக்கும்!
காலம் மாறிவிட்ட நிலையில்
இப்போதெல்லாம்
முன்போல கடிதங்கள் எழுதப்படுவதுமில்லை,
அனுப்பப்படுவதுமில்லை!
எல்லாம் இ-மெயிலும், SMS-ம்
செய்த மாயம்.
எனது பள்ளிப்பருவத்தில்
நடந்த நிகழ்வு இது..
அப்போது எனது பாட்டியின் கிராமத்தில் நண்பர்கள் அனைவரும் சேர்ந்து நியூ இண்டியன்
கிரிக்கெட் டீம் என்று ஒரு டீமை
உருவாக்கியிருந்தோம்.
அதற்காக விளையாட்டு உபகரணங்கள் வாங்க ஆளுக்கு 25 ரூபாய் நிர்ணயித்திருந்தோம்.
நான் மட்டும் வெளியூர் என்பதால், எனக்கு
அதை தெரிவிக்க
நண்பனொருவன்
எனது பள்ளிக்கு
எனது வகுப்பைக்
குறிப்பிட்டு
என் பெயருக்கு ஒரு கடிதம் எழுதிவிட்டான்..
அதில் கடைசியாக
இப்படிக்கு நியூ இண்டியன் கிரிக்கெட் டீம் என்ற பெயர் வேறு!
ஆசிரியர் பாடம்
நடத்திக்
கொண்டிருக்கையில்
கடிதம் வந்தது.
கேட்கவா வேண்டும்?
கணக்கு வாத்தியார் எனக்கு நல்ல பாடம் கற்பித்துவிட்டார்!
இப்படி கடிதங்கள் பற்றிய கற்பனைகளை
நினைத்துப் பார்க்கையில்
இ-மெயிலும் Sms-ம்
அவ்வளவு ரசனையுள்ளதாய்
தோன்றவில்லை!
இன்றும் நான்
பத்திரப்படுத்தி வைத்திருக்கும் கடிதங்களையும்
நண்பர்களின்
வாழ்த்து அட்டைகளையும்
எடுத்துப்பார்த்து
பெருமூச்சோடு
எழுந்து செல்கிறேன்..

நண்பனுக்கு
மெயில் அனுப்ப
கணிணிக்காரனைத் தேடி!
¤

No comments:

Post a Comment