Friday 6 July 2012

காதலி::

¤
எப்போதும்
என்னுடனேயே இரு!

என் செவி மடல்களை உன்
முத்தத்தால் சூடாக்கு!
என் செவ்விதழ்களை
உன் பக்கம் வைத்துக்
களைப்பாக்கு!

என் விரல் ஸ்பரிசத்தால்
சிணுங்கிக்
கொண்டேயிரு!
உன் மௌனத்திலும்
என்னுள் அதிர்ந்து
கொண்டேயிரு!

உறக்கத்தின்
போது என்
தலைமாட்டிலும்
பயணத்தின் போது
என் இதயத்தின்
ஓரத்திலும்
சாய்ந்திரு!

நான் உன்னை
என்ன செய்தாலும்
கண்டுகொள்ளாதே!
உன்னை ஏதாவது
செய்ய என்னைத்
தூண்டிக் கொண்டேயிரு!

எனது தனிமைகளை
முழுவதுமாய்த்
தின்று
என்னைக் கொஞ்சம்
கொஞ்சமாய்க்
கொன்றுவிடு!

என்னுயிர்
"செல்போன்" காதலியே!
எப்போதும்
என்னுடனேயே இரு!
¤

No comments:

Post a Comment