Sunday 1 July 2012

கடவுைளத்தேடி....

பத்துரூபாய்
சிறப்பு தரிசன வரிசையில்
பெருமிதத்தோடு
கடவுளைக் காண
முன்னேறிக்
கொண்டிருக்கிறேன்..
ஒருவேளை
கடவுள்
நீண்ட
பொதுதரிசன வரிசையில்
கால்கடுக்க காத்திருக்கும்
கடைசி
பக்தனுக்கு
அருகில் கூட நின்று
கொண்டிருக்கலாம்!

No comments:

Post a Comment