¤
மழை பற்றி
ஏதும்
தெரியாது..
நனைவதைத் தவிர!
¤
அப்போது பெய்த
மழையும்
இப்போது பெய்யும்
மழையும்
இனி எப்போதோ
பெய்யப்போகும்
மழையும்
நானும் நீயும்
நனையத்தான்!
¤
மழையால்
பள்ளி விடுமுறை..
வெளியே செல்ல
அனுமதிக்காத
வகுப்பறையாகிறது
கதவடைத்த வீடு!
¤
நான்..
நீ...
மழை..
நடுவே
சொட்ட சொட்ட
நனைந்து
கொண்டிருக்கிறது
காதல்!
¤
இடி மேளத்தோடு
மின்னல் சாட்டையை
சுழற்றியபடி
மேகக் குதிரையில்
அதிவேகமாய்
தரையிறங்கிக்
கொண்டிருக்கும்
கடவுளுக்கு
பூலோகத்தில்
கறுப்புக் கம்பளம்
விரித்து வரவேற்பு!
¤
Published with Blogger-droid v2.0.4
No comments:
Post a Comment