சுவாசத்தால்
உயிர் வாழ்தலை
விட மாத்திரை
வாசத்தால் உயிர் வாழும்
நோயுலகம்
வேண்டாம்
கல்விக்கண் திறந்த காமராஜ நாட்டினில்
கல்விக்கடை திறக்கும்
ராஜ தந்திரக்
கூடங்கள் வேண்டாம்
செயல்தனில் செயலிழந்து வெறும்
வாய்ப்பேச்சில்
வாள் வீசும்
வீரமும்
வேண்டாம்
அகத்தில் வளரும்
அக்னிக்குஞ்சுகள்
புறத்தில் பசி
வந்ததும்
பறந்தோடும்
ஏழ்மையும்
வேண்டாம்
ஆன்மீகத்தில்
பெண்மீகம் தேடும் போலிக்
கடவுளர்கள்
வேண்டாம்
பால்புட்டி தவிர்த்து
காசுக்கு கைநீட்டும்
அநாதைப் பிஞ்சுகள்
வேண்டாம்
வேண்டாம் வேண்டாமென்ற
இத்தனை
கனவும் மெய்ப்பட
வீட்டிற்கொரு
பாரதியும்
வீதிக்கொரு
சாரதியும்
மீண்டும் மீண்டும்
பிறந்திட வேண்டும்
மாயத்தில் மாண்ட
என்னுலகம்
மீண்டிட
வேண்டும்!
இந்தக் கனவாவது
மெய்ப்பட வேண்டும்
¤
No comments:
Post a Comment