Tuesday 31 July 2012

பழக்கமில்லாத காதல்::



¤

எனக்குள்ளும்

எப்போதாவது

வண்ணத்துப்பூச்சிகள்

வட்டமடித்துக்

கொட்டமடிக்கும்...


ஆம்பல் பூக்கள்

அழகழாய்ப்

பூத்துப்பூத்து

இதயம் மணக்கும்..


ஆயிரம்புள்ளிக்

கோலமொன்றை

அரைநொடியில்

மனம் வரையும்..


அடிவயிற்றில்

மின்னல் கீற்றொன்று

ஆழமாய்

லயம் பரப்பும்..


மாத்திரையில்

உயிர் யாத்திரை

நிகழ்த்திக் கொண்டிருக்கும்

அம்மாவும்


கன்னியாஸ்திரியாய்

காலம் தள்ளிக்

கொண்டிருக்கும்

அக்காவும்


என்

எண்ணத்தில்

எழாதவரையில்


இப்படித்தான்

ஆரவாரமாய் என்னுள்

வாழ்ந்து கொண்டிருக்கும்..


எனக்கின்னும்

பழக்கப்படாத

இந்தக் காதல்!

¤


Published with Blogger-droid v2.0.4

No comments:

Post a Comment