Friday 6 July 2012

எழுதியதில் பிடித்தது::

நான் எழுதியதில் பிடித்தது
¤
படைத்தல் காத்தல்
அழித்தல்
இம்மூன்றையும்
செய்வது
இறைவனென்றால்
வாழ்தலை காதல்
செய்கிறது
¤
மாதா பிதா குரு
தெய்வம் நால்வரும்
போதிக்கும்
சாதி மதத்தை
கடைசிவரை
கற்றுக்கொள்வதேயில்லை
நட்பு
¤
ஐந்துபெண் பெற்றால்
அரசனும்
ஆண்டியாவான்
என்னும் பழமொழியை
திருத்தி எழுதுங்கள்
தேவதைகளின்
தந்தையாவான் என்று!
¤
தமிழைப் பற்றி
ஒரு கவிதையெழுதச்
சொன்னார்கள்..
நான் இப்படி
எழுதினேன்..
"தமிழ்"
¤
புத்தனை அறிந்திராத
நண்பனொருவனுக்கு
புத்தன் பற்றி மூச்சுவாங்காமல்
போதித்துக்
கொண்டிருந்தேன்..
ஒரு வார்த்தை கூட பேசாமல்
அமைதியாய்
உள்வாங்கிக்
கொண்டிருந்தான்
நண்பன் இன்னொரு
புத்தனாக!
¤
திருமணம்
சொர்க்கத்தில்
நிச்சயக்கப்படுவதும்
உன்னோடு
நிச்சயக்கப்படுவதும்
ஒன்றுதான்!
¤

No comments:

Post a Comment