Tuesday 24 July 2012

கட்டுரை:2

¤
தேவதைத்
தேடல்கள்
¤
"திருமணம் சொர்க்கத்தில்
நிச்சயிக்கப் படுவதும்
உன்னோடு நிச்சயக்கப்படுவதும்
ஒன்றுதான்" என்னும்
எனது கவிதையோடு
தொடங்குகிறேன்.
முன்பெல்லாம்
மாப்பிள்ளை கிடைப்பது பெரும்பாடென்றால்
இன்று பெண்
கிடைப்பது அதைவிடப்
பெரும் பாடாய் இருக்கிறது.
இருபத்தைந்து
வயதிலிருந்து ஆண்மகனுக்கு
பெண்பார்க்க ஆரம்பிக்கிறார்கள்.
ஆனால்
அதில் பலருக்கு
முப்பத்தைந்தில்தான்
திருமணம் நடக்கிறது.
என்ன காரணம்?
அழகிருந்தால் படிப்பில்லை
படிப்பிருந்தால் வேலையில்லை
வேலையுமிருந்தால்
சொத்தில்லை..
இதற்கு யார் காரணம்?
ஆண் தான் காரணம். ஆமாம்..
பெண்ணைப் பெற்ற ஆண்தான்
அதிகளவில் காரணம்.
பெண்ணை நல்ல இடத்தில் கட்டிக்
கொடுத்து அவள் நல்லாயிருக்கனும்
என்று நினைப்பதில்
தவறேதுமில்லை!
ஆனால் 'நல்ல'
வரனை தேர்ந்தெடுப்பதில்
பலசமயம் தவறிவிடுகிறார்கள்.
சுயதொழில் செய்பவனை மதிப்பதில்லை..
அவனுக்கு கட்டிக் கொடுத்தால் பெண்ணும் கஷ்டப்படனுமாம்!
என்ன சிந்தனை இது?
நூற்றுக்கு தொண்ணூற்றொன்பது
சதவிகிதம்
பெண்ணின் வாழ்க்கை பற்றி
யோசிக்கிறார்களே தவிர
பெண்ணின் விருப்பம் பற்றி
தெரிந்துகொள்ள
யாருக்கும் அக்கறையில்லை!
எனக்குத் தெரிந்து
ஒரு பெண் நேரடியாகவே
சொல்லி நொந்திருக்கிறது
என் அப்பா எந்த வரனிலும்
திருப்தியடைய
மாட்டேன்கிறாரென்று.
எந்த லட்சணத்தில்
இருக்கிறது பாருங்கள்
பாரதி கண்ட புதுமைப் பெண்களின் நிலை?
எனது நண்பர் ஒருவருக்கு 3 வருடங்களாக பெண் தேடுகிறார்கள்.
அளவான அழகு,
பட்டதாரி,
சுயதொழில்
நல்ல சம்பாதனை
இருந்தும் பெண்
கொடுக்க யாருமில்லை.

பெண்ணைப் பெற்றவர்கள்
நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்..
விதைத்ததைத்தான்
அறுவடை செய்தாக வேண்டும்.
நாளை உங்கள் மகளுக்கு ஒரு ஆண் பிறந்தால் அவனுக்கும் இதே நிலைதான்!
போதும்!
இனிமேலும் முதிர்காளைகளை
உருவாக்காதீர்கள்!
ஆரம்பத்தில் நல்ல குடும்பத்தில் பிறந்த ஒழுக்காமான
பையனா இருந்தா
போதுமென்று சொல்லிவிட்டு,
நாட்கள் நகர நகர
சொத்து இல்லை,
பத்தில்லை என்று
பணத்தாசை கொண்ட ஈனப்புத்தியோடு
வரன்தேடி அலையாதீர்கள்..
உங்கள் பெண்களை
தேவதையாக்குங்கள்.
தேய்பிறையாக்காதீர்!
இந்தக் கட்டுரை யாரையும் புண்படுத்த அல்ல!
ஒருசிலரை
மேம்படுத்தவே!
என்று சொல்லி முடிக்கிறோம்
முதிர்காளைகளின்
சார்பாக!
என்ன கொடுமை சார் இது?!
¤

No comments:

Post a Comment