Wednesday 11 July 2012

கடவுளும் நானும்::

¤
அந்தக் கடவுளுக்கு
பசுவின் உயிர் கரந்து
பாலாபிஷேகம் செய்தேன்

இந்தக் கடவுளுக்கு மெய்வருத்திய கூலிதனை
உண்டியல்
காணிக்கையாக்கினேன்

அந்தக் கடவுளுக்கு
பூக்களைக் கொலை
செய்து
பூஜை செய்தேன்

இந்தக் கடவுளுக்கு
அசைவப் படையலிட்டு
விருந்து வைத்தேன்

அந்தக் கடவுளும்
இந்தக் கடவுளும்
எந்தக் கடவுளும்
இதில் எதையும்
கேட்கவில்லை

இருந்தும்
கேட்காமலே
கொடுத்துக் கொடுத்து
அதுவும் இதுவும்
வேண்டுமென்று
கேட்கிறேன்
பகுத்தறிவு கேளாத
நான்!
¤

No comments:

Post a Comment