Sunday 8 July 2012

வெட்கம் பூசிய கவிதைகள்::

¤
உன் வெட்கம்
பற்றி நான் எழுத
நினைத்ததெல்லாம்
வெட்கப்பட்டுக் கொண்டே
என்னுள் கிடக்கிறது
இன்னும்
வெளிவராத
கவிதைகளாய்!
¤
தைரியத்தை
வரவழைத்துக் கொண்டு
உன்னை முத்தமிட
நெருங்குகையில்
எவ்வளவு
எச்சரிக்கையாய்
இருந்தாலும் என்
வீரம் ஓடி
ஒளிந்துகொள்கிறது
உன் வெட்கத்தின் பின்னால்!
¤
கொஞ்சம் வெட்கப்பட்டுக்
காட்டேன்!
தொட்டாச்சிணுங்கி
பற்றி நான்
அறிய வேண்டும்!
¤
தேவதை என்று
நான் சொல்லும்
சிறு பொய் கேட்டு
முகம்மூடி
வெட்கப்படுகிறாயே..
வெட்கப்படும் போது
உண்மையாகவே
தேவதையாகி விடுகிறாய்!
¤
நான் உனக்குத் தரும்
ஒவ்வொரு முத்தமும்
எனக்குத் திரும்பக்
கிடைக்கிறது
வெட்கம் பூசிய
கவிதைகளாய்!
¤

No comments:

Post a Comment