Tuesday 3 July 2012

மழை வாசம்:::

¤
நீர் மூலம்
ஆக்குவதும்
நிர்மூலமாக்குவதும்
மழை அறிந்த
கலை!
¤
நனையாதே
சளி பிடிக்கும்
என்கிறாள் அம்மா..
எனக்கு மழை
பிடிக்கும் என்கிறது
குழந்தை!
¤
யார் என்ன சொன்னார்களோ?
கோபத்தில் குதிக்கிறது
கல் மாரி!
¤
மழை பெய்ய
ஆரம்பிக்கும் போதே
முளைவிட
ஆரம்பித்து
விடுகிறது
(க)விதை!
¤
எவ்வளவு
எச்சரிக்கையுடன்
குடைக்கண் விரித்து நனையாமல்
நடந்து சென்றாலும்
சாரல் என்ற கடைக்கண்ணால்
தீண்டிவிடுகிறது
மாமழை!
¤

No comments:

Post a Comment