கிழிபடாத காதல் கடிதங்கள் : 11
♥
29,4,1998 11.00 pm
பிருந்தா என்கிற தேவதைக்கு,
காதல்...காதலறிய ஆவல்.
நாம் சந்தித்துக்கொண்ட நாளிலிருந்து,
உறக்கம் உன்னையும் சந்தித்திருக்காது என எண்ணுகிறேன்.
அதுசரி...
கனவினை நேரில்
பார்த்த பிறகு
உறக்கமெதற்கு??
உனது தோழி அடிக்கடி என்னை வினவுகிறாள்...
எப்படி உன் கைக்கெட்டும் காகிதங்களெல்லாம்
கவிதையாகிறதென..
என்ன செய்வது??
நீ பரிசளித்த பேனாவைத்
தூக்கும் போதெல்லாம்,
தலைதூக்கி விடுகிறது
கவிக்கர்வம்!!
எந்தப் பெண்ணோடு பேசும் போதும்
ஒருவித அச்சமாய் தோன்றும் எனக்கு, உன்னோடு பேசுகையில் மட்டும்
கூச்சமாய் இருக்கிறதே ஏன்?
உடல்கள் ஊடலில் இருக்க,
நம் மடல்கள் மட்டும் கூடலில் கலப்பது எப்படி??
உன்னையறியாமல்
உன் கடைவிழிப் பார்வைகள்
என்மேல் வீசப்படுவது எதற்காக??
இதுபோன்ற பதிலில்லாக் கேள்விகளை கேட்டுச் சிரிக்கிறது
காதல்!!
சரி,நான் இனி உறங்கப் போகிறேன்..
கனவிலும் உன்னைக் காதலித்தாக வேண்டும்...
காலம் தாழ்த்தாமல் வந்துவிடு....
♥ நம் ஜீவன் முழுதும் காதல் பரவட்டும் ♥
இப்படிக்கு,
உன் வாசிப்பில்
வசிக்கும்
நான்...♥
(பரிமாற்றம் தொடரும்.....)
No comments:
Post a Comment