கிழிபடாத காதல் கடிதங்கள் : 15
♥
22.6.1999 7.20 am
பிருந்தா என்கிற தேவதைக்கு,
ஒருவருடக் கல்லூரி வாழ்க்கை எப்படிக் கழிந்ததென்றே
தெரியவில்லை..
இந்த ஒருவருடத்தில் கடிதப் பரிமாற்றத்தை விட,
கல்லூரி மரத்தடியில் நமக்குள் நிகழ்ந்த
வார்த்தைப் பரிமாற்றங்களே அதிகமாயிருந்தது.
இதுதவிர நாகரிகம் கொண்டுவந்த
தொலைபேசியால்,
கடிதங்களெல்லாம்
கொஞ்சம் தொலைவாகி தொலைந்து போக
ஆரம்பித்திருந்தாலும்,
காதல் நமக்குள் இன்னும் நெருங்கி
வர
ஆரம்பித்திருக்கிறது.
நீ கல்லூரி வராத
நாட்களில் தொலைபேசிதான்
உன்னை என் அருகில் வைத்திருந்தது!
ஒருவிதத்தில் தொலைபேசியும்
ஒரு பாக்கியசாலிதான்!
நீ எனக்குத் தந்த
எண்ணற்ற ஈர முத்தங்களால்
தினம்தினம் அதற்கு
கிடைக்கிறது
பன்னீர்அஞ்சலி!
ஓரிரு வருடங்களில்
அலைபேசியும் வரப்போகிறதாம்..
எது வந்தாலும் சரி,
நம் காதல் கடிதத்திலேயே பயணிக்கட்டும்!
♥ தீராக்காதல் திகட்டாதிருக்கட்டும் ♥
இப்படிக்கு,
உன் வாசிப்பில்
வசிக்கும்
நான்...♥
(பரிமாற்றம் தொடரும்.....)
No comments:
Post a Comment