கிழிபடாத காதல்
கடிதங்கள் : 4
¤
5.8.1997 7.30 pm
பிருந்தா என்கிற தேவதைக்கு,
நீ நட்பை தேர்ந்தெடுத்த நாளிலிருந்து, நீண்டு வளர்ந்திருக்கிறது நமது கடிதப் பரிமாற்றங்கள்..
ஒவ்வொரு கடிதத்திலும் நீ என்னைப்பற்றியும்
என் படிப்பைப் பற்றியுமே விசாரித்துக் கொண்டிருக்க,
நானோ காதல் பற்றியே சொல்லிக் கொண்டிருக்கிறேன்.
அறிவை வளர்க்க எனக்கு நீ பல புத்தகங்களை சிபாரிசு செய்திருந்தாலும்,
காதல் வளர்க்க கலீல் ஜிப்ரானையும், ஷேக்ஸ்பியரையுமே
நான் தேடிப் படிக்கிறேன்.
நீ ஒருமுறையாவது
காதலன் என்னும் வார்த்தையை என்
மீது பிரயோகிக்க மாட்டாயா என ஏங்கிக் கொண்டிருக்கிறேன்.
ஆனால் நீயோ,
எத்தனைமுறை
வேண்டினாலும்,
வார்த்தைகளை கல்லாக்கிக் கொண்டு மௌனப்புன்னகை
மட்டுமே புரியும்
அந்தக் கோவில்
சாமி சிலையை போல
பள்ளி(க்கூட) அறையில் வீற்றிருக்கிறாய்!
உனக்குள் காதல் குடியிருப்பதை நான் நன்கு அறிவேன்..
நீதான் நட்பென்னும்
போர்வைக்குள்
காதலை ஒளித்துவைத்து
விளையாடிக்
கொண்டிருக்கிறாய்.
ஒருநாள், காதல் உன்னைக் காட்டிக் கொடுத்துவிடும்... ஜாக்கிரதை!
அந்த நாள் விரைவில் வந்துவிட வேண்டும்..
இல்லையெனில்
இன்று பட்டாம்பூச்சி பிடித்து சிரிக்கும் நான்,என்றாவதொரு
நாளில் பைத்தியம் பிடித்து சிரிக்க நேரும்!
ஞாபகம் வைத்துக்கொள்..
நீ என்
காதலியானால் மட்டுமே
காதல் முழுதாய்
பூரணத்துவமடையும்!
என் வாழ்வும்
கூட.......!
காதல் எனது
பிரார்த்தனைக்கு
செவி சாய்க்கட்டும்!!
இப்படிக்கு,
உன் வாசிப்பில்
வசிக்கும்
நான்...
( பரிமாற்றம் தொடரும்.....)
No comments:
Post a Comment