Thursday 23 August 2012

கடிதம் : 17

கிழிபடாத காதல் கடிதங்கள் : 17


21.5.2000            11.00 pm


பிருந்தா என்கிற தேவதைக்கு,


முன்பு எப்போதாவது என்

கடைக்கு வந்துசெல்லும் நீ,

இப்போதெல்லாம்

எப்போதும் வந்துசெல்கிறாய்!


உடன் தோழி இருப்பதாலோ என்னவோ உதட்டில் புன்னகைக்கும்

வார்த்தைகளை புறந்தள்ளி,

பார்வையில் பல கவிதைகள்

சொல்லிப்போகிறாய்..

உன் கையசைப்பிலும்

கண்ணசைவிலும்

சுற்றியிருப்போர்க்கெல்லாம்

நம் காதல் சுட்டிக்

காட்டப்பட்டு விட்டது!


கேலியும் கிண்டலுமாய் என்

இளமைக்காலம் கழிந்து

கொண்டிருக்க,

காதலோ இன்னுமின்னும்

கூடிக் கொண்டேயிருக்கிறது!


நல்லவேளை..

காதல் நம்மைத்

தேர்ந்தெடுத்தது..

இல்லையென்றால்

எழுதி முடிக்கப்படாத

கவிதையாய்

பாதியிலேயே முடிந்திருக்கும்

நம் வாழ்க்கை!


♥ காதல் நம்மை முழுமையாக்கட்டும் ♥


             இப்படிக்கு,

     உன் வாசிப்பில்

               வசிக்கும்

                நான்...♥


( பரிமாற்றம் தொடரும்..... )


Published with Blogger-droid v2.0.4

No comments:

Post a Comment