கிழிபடாத காதல்
கடிதங்கள் : 8
♥
27.3.1998 7.30 am
பிருந்தா என்கிற
தேவதைக்கு,
"க"-ண்களால் களவாடி
"ணே"-சத்தால் உறவாடி
"ஸ்"-வரமாய் என்னுள் துடிக்கும் இதயம்.. நீ!
சென்றவாரம் என்
பிறந்தநாளுக்காக
நீ எழுதிய வாழ்த்து அட்டையின் வரிகள்தான் இவை..
நீ இப்போதெல்லாம்
கடிதம் எழுதக் கற்றுக்கொண்டாயோ
இல்லையோ, நன்றாய் கவிதையெழுதக்
கற்றுக் கொண்டுள்ளாய்.
நான் கவிதையை
நேசிக்க ஆரம்பித்ததும்,
வாசிக்க ஆரம்பித்ததும்,
யோசிக்க ஆரம்பித்ததும்
இதிலிருந்துதான்!
பொழுதுபோக்கிற்காக
சமையல் குறிப்புகள் மட்டுமே
படித்துக் கொண்டிருந்த உன்னால்,
எப்படி ஷேக்ஸ்பியரை
தோற்கடிக்க முடிந்தது?
எல்லாம் காதலின் செயல்!!
நான் உன் பெயரை கவிதையென்றேன்!
நீயோ, எனது பெயரின் ஒவ்வொரு எழுத்துக்களையும்
கவிதையாக்கி விட்டாய்..
உன்னைத் தேர்ந்தெடுத்த என் காதல்
உண்மையிலேயே
கொடுத்துவைத்து
பிறந்திருக்கிறது..
வேறென்ன சொல்லிவிட முடியும் என்னால்..?
♥ என்றென்றும் காதல் நம்மை
ஆளட்டும் ♥
இப்படிக்கு,
உன் வாசிப்பில்
வசிக்கும்
நான்...♥
(பரிமாற்றம் தொடரும்.....)
No comments:
Post a Comment