Sunday 26 August 2012

கடிதம் : 20

கிழிபடாத காதல்

கடிதங்கள் : 20



27.3.2001           4.30 pm


பிருந்தா என்கிற

தேவதை மனைவிக்கு,


இத்தனை நாட்களாய்

காதலியாய்

எனக்குள்ளிருந்த நீ,

நேற்றிலிருந்து

மனைவியாய்

பதவி உயர்வு

பெற்றுள்ளாய்!


உண்மையில்

திருமணம் சொர்க்கத்தில்

நிச்சயக்கப்படுவதும்

உன்னோடு

நிச்சயக்கப்படுவதும்

ஒன்றுதான்!


உனக்கு நானும்

எனக்கு நீயும்

எழுதிய காதல் வழியும்

கடிதங்களை வாசித்து வாசித்து

நேற்றைய

முதலிரவு மடலிரவாய்

விடிந்தது!


வெற்றியின் பூரிப்பில்

சிரிப்பதை விட,

கிழிபடாத கடிதங்களில்

சிலிர்த்துக் கிடந்தது காதல்!


எனது அத்தனை

கடிதங்களையும்

இத்தனைநாளாய்

எப்படி பாதுகாப்பாய்

வைத்திருந்தாய் என நான்

கேட்டதற்கு,

அஞ்சறைப் பெட்டியின் மறைவில்

வைத்திருந்தேன்

என்று கூறினாயே...


உண்மையில் பல

தோற்றுப் போன

காதலர்களின்

கடிதங்கள் இன்னும்

பரண் மேலும்,

அஞ்சறைப் பெட்டியின் மறைவிலும்தான்

வாழ்ந்து

கொண்டிருக்கிறது

அழியாக் காதலாக!


அப்படியிருக்க,

நமக்கு வரப்பிரசாதமாய்

வாய்த்திருக்கும்

இந்த தீராக்காதலை,

ஒவ்வொரு நொடியும்

கொண்டாடி

மெருகேற்றுவோம்!


எப்படியோ,

இத்தனைநாட்களாய்

காதலனாய் கவியெழுதிக்

கொண்டிருந்த நான்,

இன்று உன் கணவனாய்

கவிதையாகிப்

போனேன் போ...


♥ காதல் நம்முள்

வாழட்டும் : நம்மை

ஆளட்டும் ♥


               இப்படிக்கு,

உன் சுவாசிப்பில்

வசிக்கும் நான்...


( காதலே ஜெயம் )


Published with Blogger-droid v2.0.4

No comments:

Post a Comment