கிழிபடாத காதல் கடிதங்கள் : 12
♥
7.5.1998 1.00 am
பிருந்தா என்கிற தேவதைக்கு,
இக்கடிதம் எழுதுவதற்கு முன்பே, இந்த
வெற்றுக்காகிதத்தை
முத்தத்தால் முழுக்க நிரப்பிவிட்டு,
எழுத ஆரம்பிக்கிறேன்!
காதல்,வெட்கம்,
கண்ணீர்,கவிதை,
என ஒவ்வொன்றையும்
கடிதத்தில் பரிமாறிக்கொண்ட
நாம், இப்போது
முதல்முத்தத்தையும்
கடிதத்திலே பரிமாறிக் கொள்வோம்!
காதலை முதலில் சொன்னதைப் போல, முத்தத்தையும்
நானே முதலில் அனுப்புகிறேன்..
இந்த முதல்முத்தம்
கொஞ்சம் வேடிக்கையானது..
முத்தத் தடயத்தை நீ அறியவேண்டி,
செந்தூரம் குழைத்து அதை என் இதழ்களில் ஒற்றியெடுத்து
கடிதத்தில்
முத்திரையிட்டுள்ளேன்!
காதல் எப்படியெல்லாம்
முயற்சிக்கிறது பார்..
இதை உனது தோழியிடம் கொடுத்தனுப்ப எனக்கு
மனமில்லையென்பதால்,
கவிதைப் புத்தகத்தினுள்
என் முத்தத்தை நான்காய் மடித்து
தருகிறேன்..
அந்தக் கவிதைப் புத்தகத்திலேயே
சிறந்த கவிதை இந்த முத்தமாகத்தான்
இருக்கும்...
இதழ்களால் கவிதை படித்து,
இதயத்தால் எனது
முத்தமேந்திக்கொள்..
♥ காதல் நமக்குள்
பிரியாதிருக்கட்டும் ♥
இப்படிக்கு,
உன் வாசிப்பில்
வசிக்கும்
நான்...♥
(பரிமாற்றம் தொடரும்.....)
No comments:
Post a Comment