¤
முனகல் சத்தம்
கேட்டால்கூட
விழித்துக் கொள்கிறாள்
அலைபேசியில் அடிக்கடி
இம்சிக்கிறாள்
என் மேலுள்ள
கோபத்தினை
பிறர்மேல் வீசுகிறாள்
எவ்வளவு திட்டினாலும்
வெட்கமின்றி சிரிக்கிறாள்
அவள் அப்படித்தான்..
அம்மா என்றால்
அப்படித்தான்!
¤
Published with Blogger-droid v2.0.4
No comments:
Post a Comment