Monday 20 August 2012

கடிதம் : 14

கிழிபடாத காதல் கடிதங்கள் : 14


2.8.1998             7.20 am


பிருந்தா என்கிற தேவதைக்கு,


மூன்றுமாத இடைவெளிக்குப் பிறகு,

நீ சேர்ந்த அதே கல்லூரியில்

என்னையும் சேர்த்திருக்கிறது

காதல்!


இத்தனை நாட்களாய்

தாவணித் தேவதையாய்

வலம்வந்த நீ,

இப்போது சுடிதார்

தேவதையாய்

காட்சியளிக்கிறாய்!


கல்லூரியெங்கும்

புதுப்பதுக் காதல்கள்

அரங்கேறிக் கொண்டிருக்க,

நம் காதலோ தினம்தினம்

நம்மை புதுப்பித்துக்

கொண்டிருக்கிறது!


"கல்லூரியில் நீ நின்ற

இடமெல்லாம் கள் ஊறிய இடங்கள்"

என ஒரு கவிஞன்

சொன்னது எவ்வளவு பெரிய

உண்மையென

இப்போது தெரிகிறது!


இந்த மூன்று வருடங்களும்

மூச்சுமுட்டக் காதலிப்போம்..

கவிதைமுட்டக்

கடிதம் எழுதுவோம்..


♥ காதல் இன்னும் நம்மைக் காதலிக்கட்டும் ♥


            இப்படிக்கு,

     உன் வாசிப்பில்

               வசிக்கும்

                நான்...♥


(பரிமாற்றம் தொடரும்.....)


Published with Blogger-droid v2.0.4

No comments:

Post a Comment