கிழிபடாத காதல் கடிதங்கள் : 13
♥
22.5.1998 4.20 pm
பிருந்தா என்கிற தேவதைக்கு,
செந்தூர முத்திரையிட்டு
அனுப்பிய எனது
முத்தத்தடயத்தை
ஈக்கள் மொய்ப்பதாக எழுதியிருந்தாய்...
ஆனால் நீயனுப்பிய
உன் உதட்டுச்சாய
முத்தத்தை தேனீக்கள்
மொய்க்கிறதே!!!
சரி விடு...
இனிப்பிருந்தால் ஈக்களும்
தேனிருந்தால்
தேனீக்களும்
தேடி வருவது சகஜம்தான்!!
பள்ளி இறுதித் தேர்வுகள்
நடந்து கொண்டிருக்கும்
இந்நேத்தில்
நேற்று டியூசன்
சென்டரில்,
அவசரமாய் ஏதோ எழுதி
என்னிடம் தந்தாய்...
அதைப்படித்த பிறகுதான்
தெரிந்தது...
ஹைக்கூ கவிதை
இப்படித்தான் இருக்குமென்று...
"சீக்கிரமாய் வா...
மழை வரப்போகிறது
கோவிலில் சந்திக்கலாம்!!"
ப்ரியமுடன்,
பிருந்தா.
ஹைக்கூ நடையில் ஒரு
ஹைடெக் கவிதை படைக்க,
உன்னால் மட்டுமே முடியும்
என்பதை தத்ரூபமாய்
காட்டிவிட்டது காதல்!!
♥ காதல் இன்னும் நம்மை
மெருகேற்றட்டும் ♥
இப்படிக்கு,
உன் வாசிப்பில்
வசிக்கும்
நான்...♥
(பரிமாற்றம் தொடரும்.....)
No comments:
Post a Comment