Monday 13 August 2012

கடிதம் : 6

கிழிபடாத காதல்

கடிதங்கள் : 6



18.12.1997        6.30 pm


பிருந்தா என்கிற தேவதைக்கு,


எனது  வலி நிரம்பிய முந்தைய

கடிதத்தால்தான்

என் காதலுக்கு ஒரு வழி

பிறந்திருக்கிறது!

ஆறுமாதங்களுக்குப்

பிறகு முதன்முதலாய்,

யோசித்துச் சொல்கிறேன்

என்று எழுதியிருக்கிறாய்.


அதெப்படி?

ஆண்கள்

எவ்வித தயக்கமுமின்றி

காதலை சொல்கையில்,

பெண்கள் யோசிக்கமல் சொல்கிறார்கள்...

யோசித்துச்

சொல்கிறேன் என!


ஒருவேளை இதுதான் காதலுக்கு

முதல் வெட்கம்

அரங்கேறும் நேரமோ??


உனக்கு நான்..

எனக்கு நீ...

நமக்கு காதல்...

என்றிருக்க

வேறெதற்கு யோசனை?

வா... காதலிக்கலாம்!


♥உனது சிந்தையிலும்

சிந்தனையிலும்

காதல் நிரம்பட்டும்♥


            இப்படிக்கு,

     உன் வாசிப்பில்

               வசிக்கும்

                நான்...♥


(பரிமாற்றம் தொடரும்.....)


Published with Blogger-droid v2.0.4

No comments:

Post a Comment