நிர்மலாதேவியின்
பிரசவத்தில்
இந்த உலகிற்கு
இன்னுமொரு
சவமாய்
அவளுக்கு
இடப்பக்கம் நான்
கட்டிலில் கிடக்க
அவளோ
அதுதான்
தவம் என
பூரித்துப்
படுத்திருந்தாள்!
நடைபயின்ற
நேரம் கீழே
விழுந்த போதும்
சரி
காதல் தோல்வியால்
மனமுடைந்த போதும்
சரி
எனக்கு முன்பாகவே
அழுது எனது
அழுகையை
மறக்கச் செய்தாள்!
தேவதை
என்பதற்கும்
அழகி என்பதற்கும்
நான் அர்த்தம்
கற்றுக் கொண்டதும்
ஆன்மீகத்தொடு
பெண்மீகம்
போற்றும் கலை
கற்றுக் கொண்டதும்
அவளைப் பார்த்துதான்!
இன்று
கேள்விக் குறியாய்
வளைந்து வாழ்க்கையெனும்
அடைப்புக் குறிக்குள்ளே
நான்
அடைபட்டுக்கிடக்க
அவள் மட்டும்
இன்னும்
என் அகிலத்தில்
இருக்கிறாள்..
அசைக்கமுடியாத
ஆச்சர்யக்குறியாய்
அப்படியே!!!
No comments:
Post a Comment