Saturday 30 June 2012

கடைசி காதல் கடிதம்::

இதுவரை கடித வரிகளால் காதல் வரி கட்டிக் கொண்டிருந்த எனக்கு இந்த கடிதத்தோடு வரிவிலக்கு அளிக்கப் படுகிறது! உனக்குத் தெரியாது.. உனக்காய் வாங்கி வைத்த உதிரம் வழியும் சிவப்பு ரோஜாக்கள் எல்லாம் உவர்ப்பு ரோஜாவாய் மாறிய உண்மை! முன்பெல்லாம் கவியெழுதும் பேனா பூக்காம்பாய் மாறும்! இன்று ஏனோ தீக்கூம்பாய் எரிக்கிறது! தெரியாமல் உன் விரல் பட்டுவிடும் போதெல்லாம், தெரிந்தே மின்னல் கீற்றை தொட்டுப் பார்த்தவன், இன்று உனை விட்டுப் போக நினைக்கையில் எமனிடம் எனை விற்றுப்போக துணிகிறேன்! இத்துடன் உன் இதயம் நனைக்க என் கண்ணீர் துளிகளால் பன்னீர் துளிகளை அனுப்பியுள்ளேன்! நனைக்கவில்லை என்றால் சொல் செந்நீர் துளிகளை அனுப்புகிறேன்! இது எனது கடைசி கடிதமாய் இருப்பினும், நீ எழுதும் பதில் உனக்கு முதல் காதல் கடிதமாய் அமையட்டும்!
இப்படிக்கு,
உன் வாசிப்பில் வசிக்கும் நான்!

No comments:

Post a Comment