Sunday 17 June 2012

கோலம்:::

¤¤
வாசலில் அதிக நேரம் கோலம் போட்டுக் கொண்டிருக்காதே!
அப்புறம் மாக்கோலம் தேடி
எறும்புகள் வருவதைப்போல
உன்னை பூக்கோலம் என
நினைத்து தேனீக்கள்
வந்துவிடும்!
¤¤
நீ கோலம் போட்டு
முடிக்கும்போது
உன் வாசல்
அழகாகிறது...
ஆனால்
நீ கோலம்போட
ஆரம்பிக்கும்போதே
உன் வீதி
அழகாகிவிடுகிறது..
¤¤
அதிகாலையில்
வாசல் தெளித்து
கோலமிட்டால்
வீட்டிற்கு மகாலட்சுமி
வருவாளாம்...
ஆனால் அவள்
வீட்டில் கோலம்
போடுவதே மகாலட்சுமிதான்!
¤¤
முதல் புள்ளியில்
ஆரம்பித்து
கடைசிப் புள்ளியில் முடித்துவிட்டாய்
வாசல் கோலத்தை...
இன்னும் முதல்
புள்ளியிலேயே
கிடக்கிறது
வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த என் காதல்!
¤¤

No comments:

Post a Comment