Wednesday 20 June 2012

பட்டு::

தனது அம்மாவின்
திருமணப் புடவையை அள்ளிச்சுற்றி
அழகுபார்க்கும்
எனது நான்குவயது
மகள் பிருந்தாவிற்குத்
தெரியாது....
அவள் தினந்தோறும்
துரத்திவிளையாடும்
பட்டாம்பூச்சியால்
தான்
பட்டுப்புடவை
உருவாகிறதென்ற
ரகசியம்!!

No comments:

Post a Comment