Saturday 23 June 2012

அம்மா:::

நான் எழுதிய உறவு பற்றிய
கவிதையொன்று
ஒரு வாரஇதழில்
வெளியாகியிருந்த
சமயம் அது..

நல்லாயிருக்கு என
சுருங்கச் சொன்னார் தந்தை!

பரவாயில்லை என
பட்டும்படாமல் பாராட்டினாள் தங்கை!

வழக்கம்போல் கேலியும் கிண்டலுமாய்
புகழ்ந்தான் நண்பன்!

ஒரு முத்தத்தோடும்
சில சிணுங்கல்களோடும்
ரசித்தாள் காதலி!

ஊரெல்லாம்
பெருமையாய்
சொல்லிக் கொண்டிருந்தாள்
அம்மா!!

No comments:

Post a Comment