Saturday 16 June 2012

கோபம்::

கோவிலில்
சந்திக்கலாமென
முடிவுசெய்திருந்த
நாளொன்றில்
எனக்குமுன்பாகவே
வந்துவிட்ட நீ

தெப்பக்குளத்தினுள் கல்லெறிந்தபடி
எனக்காக
காத்திருந்தாய்..

நான் வந்துசேர்கையில்
நீ வீசிய
கோபக்கற்களால்
தெப்பக்குளம்
வெப்பக்குளமாகியிருந்தது!

No comments:

Post a Comment