Friday 29 June 2012

டைரி::

கோவிலுக்குச்
செல்லும் நல்ல
பழக்கத்தோடும்

ஏதாவதொரு
கெட்டபழக்கத்தை
விட்டுவிடும்
உறுதிமொழியோடும்
ஜனவரி 1 ல்
ஆரம்பித்து

கும்மாளமும்
குடியுமாய்
புத்தாண்டை
வரவேற்ற கதையோடு
டிசம்பர் 31 ல்
முடியும்
பெரும்பாலான
டைரிகளின்
குறிப்புகள்!

ஒவ்வொன்றின்
உள்ளேயும்
பிப்ரவரி 14 ஆம்
நாளில்
சொல்லப்பட்ட
காதலோ
கொல்லப்பட்ட
காதலோ

கட்டாயம்
புதைந்திருக்கும்!

நட்பு
பகை
ஏமாற்றம்
அவமானம்
சந்தோசம்
காதல்
பிரிவு
துரோகம்
குற்றம்
என

அடுக்கடுக்காய்
சொல்லப்
பட்டிருக்கும் அதன்
அடுத்தடுத்த
பக்கங்களில்!

அவ்வப்போது
தெரிந்தே செய்த
தவறுகள்
அப்பட்டமாய்
ஒப்புக்கொள்ளப்
பட்டிருக்கும்!

ஏதும் எழுதப்படாது
வெற்றுத்தாளாய்
கிடக்கும் ஓரிரு
நாட்கள்தான்
எழுதியவனின்
அமைதியான
தினங்கள்..

இவ்வாறாக
பன்முகங்களையும்
ஒளிவுமறைவின்றி

வெளிச்சமிட்டுக்
காட்டும்
டைரிகள்

இப்போது
பத்திரமாக
அவரவர் வீடுகளில்
ஒளித்து வைக்கப்
பட்டிருக்கிறது..

பரண் மேலும்
அஞ்சறைப்
பெட்டியின்
கீழும்..!

No comments:

Post a Comment