Monday 18 June 2012

ஆணா பெண்ணா???

ஆண் பாதி பெண் பாதி என்னும் அர்த்தமுள்ள தத்துவம் சொல்லும் அர்த்தநாதீஸ்வரரின்
கோட்பாட்டோடு தொடங்குகிறேன்!

புடவை போய் ஜீன்ஸ் வலம்
-பெண்ணுக்குள் ஆண்

மீசை மழிப்பது மிகுதியாகிறது
-ஆணுக்குள் பெண்

நெடுங்கூந்தல் குறைந்து பரவலாய் பாப்கட்டிங்
-பெண்ணுக்குள் ஆண்

ஒற்றைக் கடுக்கனும்
ஒருகை காப்பும் கலக்கல் ஃபேஷன்
-ஆணுக்குள் பெண்

உத்திரத்துப் பல்லி பார்த்தாலும் பயக்கும் ஆண்..
பாம்பைக் கண்டாலும் மிரளாத பெண்..

என ஒவ்வொரு
ஆணுக்குள்ளும்
ஒரு பெண்..
ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும்
ஒரு ஆண்..

ஆக, உடலால் உருவாகாவிடினும்
உடையாலோ
உணர்வாலோ
ஒவ்வொருவரும்
ஒவ்வொரு வகையில் ஓர் அரவாணியே!

என்னும் அர்த்தநாதீஸ்வரரின்
கோட்பாட்டோடு
முடிக்கிறேன்!

No comments:

Post a Comment