பள்ளி செல்லும்
கிராமத்துச் சிறுமிகளின்
ரெட்டைஜடையை
அலங்கரிக்கும் கனகாம்பரம்..
புது மனைவியொருத்தி
பக்கத்து இருக்கையில் உதிர்த்துவிட்டுப் போன குண்டு மல்லிகை..
முந்தைய நிறுத்தத்தில் இறங்கிய சுடிதார்
பெண்ணின் கூந்தலில் எட்டிப்பார்த்த
ஒற்றை ரோஜா என,
பயணம் முழுக்க
பல கூந்தல்களையும்
பூக்களையும் மாறிமாறிப் பார்த்துவிட்டு
வீடு வந்ததும்
கண்ணாடியில் தன்னைக்கண்டு
அழத்தொடங்கும்
மூன்றுவயது
பிருந்தாவிற்கு
தெரிந்திருக்க வாய்ப்பில்லை..
அவளுக்கு மொட்டையடித்து
நேர்த்திக்கடன்
செலுத்தியிருக்கும்
கடன்கார தகப்பனின்
பயபக்தி பற்றி!!
Published with Blogger-droid v2.0.4
ha ha ha நேர்த்திக்கடன்
ReplyDeleteசெலுத்தியிருக்கும்
கடன்கார தகப்பனின்
பயபக்தி பற்றி!!...nice ppa....so sorry dear Brundha!!!