Friday 15 June 2012

இரவு::

உண்மையில் இரவுகள் ஒவ்வொன்றும் விசித்திரமான அழகுதான்!
கயிற்றுக் கட்டிலில் கலவிக்கலை கண்ட முன்இரவுகளும்
தூக்குக்கயிற்றில் மரணம் தழுவி நின்ற பின்இரவுகளும்
இன்னும் முழுதாய் மறக்கப்படவில்லை!
கயவர்களுக்கும் கள்வர்களுக்கும்
உறங்கிய இரவுகள் ஞாபகத்திலிருப்பதில்லை!
மழை இரவில் நிலவை ரசித்ததை விட காதலியின் நினைவை ரசித்ததாலேயே
அழகாகிப்போனது
அநேக இரவுகள்!
இவ்வாறாக காதலாலும் கவலைகளாலும் கொள்ளையடிக்கப்படும்
இந்த விசித்திர
இரவுகளால்தான்
பெரும்பாலும் கிடைக்கிறது..
வெள்ளையடிக்கப்பட்ட
வெற்றுத்தாளினை
இட்டுநிரப்பும்
இம்மாதிரியான இரவல்
கவிதைகள்!

No comments:

Post a Comment