Friday 15 June 2012

அம்மா இல்லாத வீடு::

காபி மணத்தோடு காலை புலராத படுக்கையறை..
எறும்புகள் மகிழ்ந்துண்ண மாக்கோலம் கிடைக்காத வாசற்படி..
நாவில் தேனூறவைக்கும்
சாம்பார் மணம் பரப்பாத அடுப்படி..
காயப்போட்ட துணிகளை எடுத்தடுக்கும் மதியழகி மிதிபடாத மொட்டைமாடி..
இறந்துபோன கடவுளை உயிர்ப்பிக்கும் சாம்பிராணி வாசத்தோடு தேவதை வாசமும் கலந்துலவாத பூஜையறை..
என பெரும்பாலும் வெறும் காடகவே காட்சியளிக்கும்
அம்மா இல்லாத வீடு!!

No comments:

Post a Comment