கோகுலாஷ்டமியன்று
கண்ணன் வருவானென
வீடு முழுக்க
கால்தடம் வரைந்து
கொண்டிருந்த
என் மனைவியிடம்
கைத்தடத்தையும்
சேர்த்து வரையச் சொன்னேன்..
யார் கண்டது?
ஒருவேளை அந்த
மாயக்கண்ணன்
கையூன்றி
தவழ்ந்து கொண்டிருக்கும்
எங்கள் மகள்
பிருந்தாவாகக் கூட இருக்கலாம்!
Published with Blogger-droid v2.0.4
ஹ ஹ ஹா...பிருந்தா...நல்ல பெயர்ப்பா.....!!!
ReplyDelete