Tuesday 12 June 2012

கிருஷ்ண பாதம்::

கோகுலாஷ்டமியன்று

கண்ணன் வருவானென

வீடு முழுக்க

கால்தடம் வரைந்து

கொண்டிருந்த

என் மனைவியிடம்

கைத்தடத்தையும்

சேர்த்து வரையச் சொன்னேன்..

யார் கண்டது?

ஒருவேளை அந்த

மாயக்கண்ணன்

கையூன்றி

தவழ்ந்து கொண்டிருக்கும்

எங்கள் மகள்

பிருந்தாவாகக் கூட இருக்கலாம்!


Published with Blogger-droid v2.0.4

1 comment:

  1. ஹ ஹ ஹா...பிருந்தா...நல்ல பெயர்ப்பா.....!!!

    ReplyDelete