Friday 15 June 2012

மரணத்திற்கு பிறகு...

உனது மரணத்திற்கு பிறகு
என்ன வேண்டுமானாலும்
நடக்கலாம்

அன்பானவர்கள் அழாமல் அமைதியாயிருக்கலாம்
எதிரிகள் துக்கம் அடைக்க அமர்ந்திருக்கலாம்

காதலிக்கு உன் சாவு சொல்லப்படாமல்
போயிருக்கலாம்
செய்தியறிந்த நண்பனொருவன்
வராமல்
இருந்திருக்கலாம்

தாரை தப்பட்டைகளோடு
தடபுடலாய் கொண்டு செல்லப்படலாம்
எடுத்தெறிய ஆளின்றி அநாதைப் பிணமாய்க் கூடக் கிடக்கலாம்

கடைசியாய்
உன்னை எரித்தால்
ஒருபிடி சாம்பல் மிஞ்சலாம்
புதைத்தால் அதுகூட மிஞ்சாமல்
போகலாம்...

உனது மரணத்திற்குப் பிறகு என்ன
வேண்டுமானாலும்
நடக்கலாம்!

No comments:

Post a Comment