Friday 15 June 2012

நிராசை::

மகள் பிருந்தாவிற்கு
நீதிக்கதை
சொல்லிக் கொண்டிருந்தாள்
என் மனைவி..
வடையைக் காலடியில் வைத்துக்கொண்டு
பாட்டுப்பாடிய
காக்கையின்
புத்திசாலித்தனத்தை
எண்ணி வியப்பதைக் காட்டிலும்,
ஆசைப்பட்ட வடையில் பாதிகூடக் கிடைக்காத நீதியால்
ஏமாந்துபோன
நரியைச் சுற்றியே
இருந்தது பிருந்தாவின்
முழு வருத்தமும்!

No comments:

Post a Comment